கணவரை பிரிந்து வாழ்ந்த பழங்குடியின பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

Published by
Rebekal

கணவருடன் ஒத்துப் போகாததால் சுமூகமாக பேசி பிரிந்து, வேறு ஆணுடன் வாழ்ந்து வந்த பழங்குடியின பெண்ணை முன்னாள் கணவரின் உறவினர்கள் மற்றும் கணவர் ஆகியோர் சேர்ந்து கொடுமைப்படுத்தி உள்ள வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த குணா எனும் மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய பழங்குடியின தம்பதிகள் இருவருக்கும் அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சுமூகமாக பேசி பிரிந்து இருக்கிறார்கள். அதன்பின்பு அந்த பழங்குடியின பெண் தனக்கு பிடித்த மற்றொரு ஆணை திருமணம் செய்துகொண்டு வேறொரு கிராமத்திற்கு சென்று வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வேறு ஆணுடன் நிம்மதியாக வாழ்வதை பொறுக்க முடியாத முன்னாள் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் அந்தப் பெண்ணை சித்திரவதை செய்யக்கூடிய வீடியோ காட்சி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

கணவரின் உறவினர் ஒருவரை நீண்ட தூரம் சுமந்து செல்லுமாறும் கீழே விட்டால் அடிப்போம் என்றும், பின்னால் வருபவர்கள் கைகளில் மட்டையுடன் சிரித்துக் கொண்டே செல்லும் காட்சிகள் தற்பொழுது வெளியாகி வைரல் ஆகியுள்ளது. இதனை அடுத்து இவ்வாறு நடந்துகொள்ளும் முன்னாள் கணவரின் உறவினர்கள் மற்றும் கணவருக்கு மிகுந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதேபோல ஏற்கனவே கடந்த ஜூலை மாதமும் ஒரு பழங்குடியின பெண்ணுக்கு மத்திய பிரதேசத்தில் இதுபோன்று கொடுமை நடந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
Rebekal

Recent Posts

“ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகுதான் இந்து மதம் வந்தது” – விசிக தலைவர் திருமாவளவன்.!

“ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகுதான் இந்து மதம் வந்தது” – விசிக தலைவர் திருமாவளவன்.!

சென்னை : விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா, நேற்றிரவு கலைவாணர் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில்…

29 seconds ago

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி.! இந்திய அணி தோல்விக்கு காரணம் என்ன.?

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும்…

13 minutes ago

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

10 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

11 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

12 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

12 hours ago