கணவருடன் ஒத்துப் போகாததால் சுமூகமாக பேசி பிரிந்து, வேறு ஆணுடன் வாழ்ந்து வந்த பழங்குடியின பெண்ணை முன்னாள் கணவரின் உறவினர்கள் மற்றும் கணவர் ஆகியோர் சேர்ந்து கொடுமைப்படுத்தி உள்ள வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த குணா எனும் மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய பழங்குடியின தம்பதிகள் இருவருக்கும் அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சுமூகமாக பேசி பிரிந்து இருக்கிறார்கள். அதன்பின்பு அந்த பழங்குடியின பெண் தனக்கு பிடித்த மற்றொரு ஆணை திருமணம் செய்துகொண்டு வேறொரு கிராமத்திற்கு சென்று வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வேறு ஆணுடன் நிம்மதியாக வாழ்வதை பொறுக்க முடியாத முன்னாள் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் அந்தப் பெண்ணை சித்திரவதை செய்யக்கூடிய வீடியோ காட்சி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
கணவரின் உறவினர் ஒருவரை நீண்ட தூரம் சுமந்து செல்லுமாறும் கீழே விட்டால் அடிப்போம் என்றும், பின்னால் வருபவர்கள் கைகளில் மட்டையுடன் சிரித்துக் கொண்டே செல்லும் காட்சிகள் தற்பொழுது வெளியாகி வைரல் ஆகியுள்ளது. இதனை அடுத்து இவ்வாறு நடந்துகொள்ளும் முன்னாள் கணவரின் உறவினர்கள் மற்றும் கணவருக்கு மிகுந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதேபோல ஏற்கனவே கடந்த ஜூலை மாதமும் ஒரு பழங்குடியின பெண்ணுக்கு மத்திய பிரதேசத்தில் இதுபோன்று கொடுமை நடந்தது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…