ஊரடங்கு நீட்டிப்பு: பிரதமர் மோடி உரையின் முக்கிய 10 அம்சங்கள்.!

Published by
பாலா கலியமூர்த்தி

பிரதமர் மோடி உரையாடலில் கொரோனா தடுப்பு குறித்தும் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவது பற்றியும் பேசியுள்ளார். அதில், இங்கு முக்கிய 10 அம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் கொரோனா தீவிரம் காரணமாக 3 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு மே 17 ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். தற்போது, நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். இந்த உரையாடலில் கொரோனா தடுப்பு குறித்தும் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவது பற்றியும் பேசியுள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்களை பற்றி காண்போம்.

  • ரூ.20 லட்சம் கோடிக்கு பொருளாதார சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார். சிறப்பு திட்டங்கள் மூலம் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறுவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
  • இந்தியாவின் வளர்ச்சி உலகின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக இருக்கும். உலகிற்கே இந்தியா நம்பிக்கை ஒளியை கொடுத்து வருகிறது என்று கூறியுள்ளார்.
  • உலக நாடுகளுக்கு பொருட்கள் மற்றும் சேவைகள் அளிப்பதில் இந்தியா முக்கிய இடம்பெற வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
  • உலகிற்கே இந்தியா வழங்கியுள்ள பெரும் பரிசு யோகா பயிற்சிகள் ஆகும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
  • உலக நாடுகளுக்கு இந்திய மருந்துகளே கொரோனாவுக்கு எதிரான போரில் தன்னம்பிக்கையை கொடுத்து வருகிறது.
  • நம்நாட்டில் கொரோனா பாதிப்பை சமாளிக்க உள்நாட்டு தொழில்துறையே கைகொடுத்திருக்கிறது.
  • கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 4வது கட்ட ஊரடங்கை பிரதமர் அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் இதன் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
  • தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா மாறுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் கொரோனாவுக்கு பின் உலகை இந்தியா முன்னின்று வழிநடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
  • இந்தியாவுக்கு முக்கியமான வாய்ப்பை இந்த கொரோனா வைரஸ் தந்துள்ளது. உலகிற்கே இந்தியா நம்பிக்கை ஒளியை கொடுத்து வருகிறது.
  • யாரையும் சாராமல் தன்னம்பிக்கையுடன் இருப்போம் என 130 கோடி இந்தியர்களும் உறுதி ஏற்க வேண்டும் என்று பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்களாக கருதப்படுகிறது.
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…

6 hours ago

ரூ.5.37 கோடி கொடுக்கவில்லை…மதராஸி படக்குழுவினர் மீது புகார் கொடுத்த நிறுவனம்!

சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…

6 hours ago

இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை …விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…

7 hours ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

9 hours ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

9 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

10 hours ago