இன்று முதல் டெல்லியில் ஊரடங்கு தளர்வு – மெட்ரோ ரயில் சேவைகள் தொடக்கம்!

Published by
Rebekal
  • டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் மிக அதிக அளவில் குறைந்து வருகிறது.
  • இன்று முதல் டெல்லியில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தாக்கம் இந்தியா முழுவதிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் நாளொன்றுக்கு 28,000 பேர் பாதிக்கப்படும் அளவிற்கு கொரோனாவின் தாக்கம் உச்சத்தை தொட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், நேற்று டெல்லியில் 381 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்பொழுது கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து அங்கு ஊரடங்கு தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி சந்தை மற்றும் வணிக வளாக கடைகள் சுழற்சி முறையில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவையும் 50% பயணியுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாதத்திற்கு பின் தற்பொழுது தான் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளது. இந்நிலையில் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றி மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

13 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

43 minutes ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

1 hour ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

9 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

9 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago