#DAHike:நற்செய்தி…இவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு!

Published by
Edison

மத்திய அரசு ஊழியர்களிக்கு மகிழ்ச்சிஅளிக்கும் வகையில் மத்திய அரசு ஓர் முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது.அதன்படி,மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (டிஏ) 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது.மேலும்,ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி நிவாரணமும் (டிஆர்) 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.DA உயர்வு மற்றும் DR உயர்வு மூலம் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.

அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி,நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில்,7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்த ஓய்வூதியதாரர்கள் இதனால் பயனடைவார்கள்?:

  • ரயில்வே குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்.
  • அகில இந்திய சேவை ஓய்வூதியம் பெறுவோர்.
  • மத்திய அரசு உட்பட சிவில் ஓய்வூதியம் பெறுவோர்,குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்.
  • பொதுத்துறை நிறுவனம்,தன்னாட்சி அமைப்புகளில் ஓய்வூதியம் (absorbee pensioners) பெறுபவர்கள்.
  • ஆயுதப்படை ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் சிவில் ஓய்வூதியம் பெறுவோர்.
  • பர்மா சிவிலியன் ஓய்வூதியம் & குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்த அரசு ஓய்வூதியம் பெறுபவர்களின் குடும்பங்களுக்கு இந்த நடைமுறை பொருந்தும் என்று கூறப்படுகிறது.

Recent Posts

நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலி: ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்!

நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலி: ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்!

சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…

31 minutes ago

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 03) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…

50 minutes ago

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

9 hours ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

11 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

13 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

14 hours ago