தலித் தலைவர் சுட்டுக்கொலை.. தேஜஸ்வி யாதவ் மீது FIR பதிவு..!

Published by
murugan

பீகாரில் வருகிற 28-ம் தேதி 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதைதொடர்ந்து, இந்த தேர்தலில் களம் காணும் முக்கிய கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதாள கட்சியின் உறுப்பினரும், தலித் இனத்தைச் சேர்ந்தவருமான சக்தி மாலிக்  சமீபத்தில்,  ராஷ்டிரிய ஜனதா தளத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், சக்தி மாலிக் ராணிகஞ்ச் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடத் தயாராக இருந்துள்ளார்.

இந்நிலையில், பீகாரின் பூர்னியா மாவட்டத்தில் உள்ள சக்தி மாலிக் வீட்டில்  நேற்று மூன்று நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி அளித்த புகாரைத்  தொடர்ந்து, ராஷ்ட்ரிய ஜனதாள கட்சி தலைவரும் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாள கட்சி தலைவர் அனில் குமார் சாது , எல்ஜேபி நிறுவனர் ராம் விலாஸின் மருமகள் பாஸ்வான் ஆகியோர் பெயர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராஷ்ட்ரிய ஜனதாள கட்சி செய்தித் தொடர்பாளர் மிருத்யூஞ்சய் திவாரி கூறுகையில், “இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்” என்றார்.

 

Published by
murugan

Recent Posts

ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!

ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

1 hour ago

175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?

வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…

2 hours ago

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்.? ஊர்ந்தீர்களா? தவழ்ந்தீர்களா? ஸ்டாலின் மீது இபிஎஸ் விமர்சனம்.!

சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…

2 hours ago

MI vs DC: பிளே ஆஃப்-க்கு தகுதி பெறப்போவது யார்? டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு.!

மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும்  டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…

3 hours ago

அனகாபுத்தூர் ஆற்றங்கரையோர மக்களுக்கு மாற்று வீடு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை…

4 hours ago

விசாகா கமிட்டி அமைக்காதது ஏன்? – அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி.!

சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…

4 hours ago