தலித் இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம்! இரண்டு காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

Published by
லீனா

தலித் இளைஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில், அடித்த குற்றச்சாட்டில் எஸ்ஐ மற்றும் கான்ஸ்டபிளை இடைநீக்கம்.

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சீதானகரம் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு, தலித் இளைஞர் பிரசாத் என்பவரை காவல்துறையினர் சரமாரியாக தாங்கி உள்ளனர். இதனால், படுகாயமடைந்த பிரசாத், ராஜமுந்திரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உள்ளூர் ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவரின் டிரக்கை நிறுத்தியதற்காக பிரசாத் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பேட்டியளித்த பிரசாத், எனது உறவினர் ஞாயிற்றுக்கிழமை காலமானார். நாங்கள் இறுதி சடங்குகளைச் செய்து கொண்டிருந்தோம்.  அப்போது, ஒரு டிரக் எனது தெரு வழியாக செல்ல முயன்றது. கடைசி சடங்கு முறைகள் நடைபெற்று வருவதால், நானும் மற்ற மூன்று பேரும் மணல் டிரக்கின் இயக்கத்தை நிறுத்தினோம். நாங்கள் சடலத்தை அந்த இடத்திலிருந்து நகர்த்தும் வரை சிறிது நேரம் காத்திருக்குமாறு டிரக் டிரைவரிடம் கேட்டோம். இது வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவம் நடந்த ஒரு நாள் கழித்து, சப்-இன்ஸ்பெக்டர் பொலிஸ் ஷேக் ஃபெரோஸ் ஷா, மேலும் இரண்டு கான்ஸ்டபிள்களுடன், என்னையும் மற்ற இருவரையும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றார். எஸ்.ஐ தன்னை குத்தியதாகவும், பெல்ட் மூலம் தாக்கியதாகவும் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் என்.சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆந்திர மாநில டிஜிபி விசாரணையைத் தொடங்கி, அந்த நபரை அடித்த குற்றச்சாட்டில் எஸ்ஐ மற்றும் கான்ஸ்டபிளை இடைநீக்கம் செய்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

27 minutes ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

53 minutes ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

2 hours ago

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை…எஸ்.பி.வேலுமணி விளக்கம்!

சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

2 hours ago

மும்பை வேண்டாம் வேறு மாநிலத்துக்கு விளையாடப்போறேன்! அனுமதி கேட்கும் பிரித்வி ஷா!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…

3 hours ago

போதைப்பொருள் வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது!

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…

3 hours ago