Categories: இந்தியா

பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் பீகார் முதல்வருக்கு கொலை மிரட்டல்… போலீசார் அதிரடி கைது.!

Published by
Muthu Kumar

பிரதமர் மோடி, அமித்ஷா, மற்றும் பீகார் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லி காவல்துறைக்கு போன் செய்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரை கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்த 37 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து டெல்லி துணை போலீஸ் கமிஷனர் ஹரேந்திர குமார் சிங் கூறுகையில் குடிபோதையில் அந்த நபர் அழைப்பு விடுத்ததாக தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் சுதீர் சர்மா என்றும் அவர் கார்பென்டராக வேலை செய்து வருபவர் என்றும் விசாரணையில் தெரியவந்தது. சுதீர் சர்மா முதலில் காலை 10.46 மணிக்கு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்து பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரின் பெயரை சொல்லி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து இரண்டாவது முறையும் காலை 10.54 மணிக்கு கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, 2 கோடி ரூபாய் தராவிட்டால் பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் கொன்றுவிடுவேன் என்று கூறியிருக்கிறார். இதன்பின் விசாரணையில் சுதீர் சர்மாவின் மகன் அங்கித், தன் தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர், அவர் குடித்துவிட்டு இவ்வாறு பேசியுள்ளதாக கூறினார்.

Published by
Muthu Kumar

Recent Posts

ஆக 2 முதல் 5 வரை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ஆம்…

12 minutes ago

நடப்பு நிதியாண்டில் 9 ராக்கெட்கள் ஏவ திட்டம்- இஸ்ரோ தலைவர் நாராயணன் முக்கிய தகவல்!

சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவர் வி. நாராயணன், நடப்பு நிதியாண்டில் (2025-26) 9 முக்கிய…

28 minutes ago

இந்தியாவுக்கு கூடுதலாக அபராதம் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இந்தியாவுக்கு எதிரான புதிய வரி மற்றும்…

36 minutes ago

கவின் கொலை வழக்கு : கைதான சுர்ஜித் தந்தை சரவணனுக்கு ஆக 8 வரை நீதிமன்றக் காவல் !

திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) ஆணவக் கொலை செய்யப்பட்ட…

41 minutes ago

ஏர் இந்தியா நிறுவனத்தில் 51 பாதுகாப்பு குறைபாடுகள் – DGCA தணிக்கையில் அம்பலம்.!

டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…

11 hours ago

மோடி எங்கே? அமித்ஷா பதிலுரை.., எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…

12 hours ago