pm amitshah [File Image]
பிரதமர் மோடி, அமித்ஷா, மற்றும் பீகார் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி காவல்துறைக்கு போன் செய்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரை கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்த 37 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து டெல்லி துணை போலீஸ் கமிஷனர் ஹரேந்திர குமார் சிங் கூறுகையில் குடிபோதையில் அந்த நபர் அழைப்பு விடுத்ததாக தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் சுதீர் சர்மா என்றும் அவர் கார்பென்டராக வேலை செய்து வருபவர் என்றும் விசாரணையில் தெரியவந்தது. சுதீர் சர்மா முதலில் காலை 10.46 மணிக்கு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்து பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரின் பெயரை சொல்லி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து இரண்டாவது முறையும் காலை 10.54 மணிக்கு கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, 2 கோடி ரூபாய் தராவிட்டால் பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் கொன்றுவிடுவேன் என்று கூறியிருக்கிறார். இதன்பின் விசாரணையில் சுதீர் சர்மாவின் மகன் அங்கித், தன் தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர், அவர் குடித்துவிட்டு இவ்வாறு பேசியுள்ளதாக கூறினார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…