ராஜ்கோட் விளையாட்டு மையத்தில் தீ விபத்து! 28 பேர் பலி!

Published by
பால முருகன்

ராஜ்கோட்  : குஜராத் ராஜ்கோட் விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இறப்பு எண்ணிக்கை 28- உயர்ந்துள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் நானா-மாவா சாலையில் விளையாட்டு மையம் ஒன்று உள்ளது. இந்த விளையாட்டு மையத்தில் மே 25-ஆம் தேதி திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 28 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஆழ்த்தியுள்ளது. சனிக்கிழமை இந்த விளையாட்டு மையத்தில் சிறியவர்கள், பெரியவர்கள் என பலரும் விளையாடி கொண்டு இருந்தார்கள்.

அப்போது திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டு கட்டுமானம் சரிந்தது. தீ விபத்து ஏற்பட்ட காரணத்தால் அப்பகுதியில் புகைமூட்டமாக காணப்பட்டது. விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவலை தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்ததாக முதற்கட்டமாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து அடுத்ததாக 28-ஆக உயர்ந்திருப்பதாக தகவல்கள் கிடைத்து இருக்கிறது. 9 குழந்தைகள் உட்பட 28 பேர் தீ விபத்தில் உடல் கருகி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. மேலும், உடல் கருகிய படி இறந்த காரணத்தால் யார் யார் என்று அடையாளம் தெரியாமல் இருப்பதாகவும் காவல்துறையினர் தகவலை தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் டிஆர்பி கேம் மண்டலத்தின் உரிமையாளர் மற்றும் மேலாளர் உட்பட 10 பேரை கைது செய்து IPC பிரிவுகள் 304, 308, 337, 338, மற்றும் 114 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் இந்த விளையாட்டு மையம் அரசின் தடையில்லா சான்று பெறாமலேயே இயக்கியிருப்பது தெரிய வந்து இருக்கிறது. தடவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாதிரிகளை சேகரிக்க தொடங்கி உள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடும்பத்திற்கு குஜராத்தின் முதலமைச்சர் புபேந்திர படேல் இரங்கல் தெரிவித்ததோடு பிரதமர் மோடியுடன் பேசி விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

8 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

8 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

9 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

10 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

10 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

11 hours ago