டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,100பேர் கொரோனாவிலிருந்து மீண்டு, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,887 ஆக குறைந்துள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர். அந்த வகையில் தலைநகரான டெல்லியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 1,100க்கும் மேற்பட்டோர் மீண்டு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,887ஆக குறைந்துள்ளது.
அதாவது, டெல்லியில் 1,32,275 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிலிருந்து 1,17,507 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே டெல்லியின் மீட்பு விகிதம் 88.9% ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 28 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 3,881 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசின் கூட்டு முயற்சியால் நிலைமை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டு, தற்போது டெல்லியில் 1.3 லட்சம் பேருக்கு மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.5 மில்லியனை தாண்டி அமெரிக்க மற்றும் பிரேசிலுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…