டெல்லி கிரிக்கெட் மைதானம் ‘அருண் ஜெட்லி’ மைதானம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்குறைவு காரணமாக சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 24-ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்த நிலையில் டெல்லி கிரிக்கெட் மைதானம் ‘அருண் ஜெட்லி’ மைதானம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி கிரிக்கெட் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில்,டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானம் ‘அருண் ஜெட்லி’ மைதானம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மறைந்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை கவுரவிக்கும் வகையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய பெயர் சூட்டும் நிகழ்ச்சி செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது டெல்லி கிரிக்கெட் சங்கம்.
கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்ட அருண் ஜெட்லி, இந்திய கிரிக்கெட் வாரிய துணை தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக அருண் ஜெட்லி பதவி வகித்த நிலையில் அவரது நினைவாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…