நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.கே.வாசன் அவர்கள், பாரதியாரின் சிலையில் இருந்த கைத்தடியை மீண்டும் வைக்க கோரி டெல்லி துணை முதல்வருக்கு கடிதம்.
இன்று நாடு முழுவதும் பாரதியாரின் 139-வது பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டு வருகிற நிலையில், இன்று பல கட்சி தலைவர்களும் டெல்லி, சுப்பிரணியன் மார்க் சாலையில் இருக்கும், பாரதியாரின் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில், பாரதியாரின் சிலையில் கைத்தடி காணாமல் போயுள்ளது குறித்து எந்த தலைவர்களும் கவனிக்கவில்லை. மேலும், இதுகுறித்து அந்த சிலையை சுற்றி தூய்மைப்படுத்தக் கூடியவர்களிடம் கேட்ட போது, அந்த கைக்கம்பு சில வாரங்களாகவே காணாமல் போயுள்ளது. அதுகுறித்து யாரும் பதில் சொல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.கே.வாசன் அவர்கள், பாரதியாரின் சிலையில் இருந்த கைத்தடியை மீண்டும் வைக்க கோரி டெல்லி துணை முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘பாரதியாரின் கைத்தடி காணாமல் போனது குறித்து விசாரணை மேற்கொண்டு, உடனடியாக புதிய கைத்தடியை வைக்க வேண்டும். வரும் நாட்களில் சிலையினுடைய பராமரிப்பை அரசு சிறப்பாக, முறையாக உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.’ என எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…