9 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து -துணை முதல்வர் மணீஷ் சிசோடியா..!

Published by
Hema

டெல்லியில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிவிப்பு.

கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன் கருதி டெல்லி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 9 மற்றும் 11 வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக ஏப்ரல் 12 ம் தேதி டெல்லி அரசு 9 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைத்தது, அவை இப்போது முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வருடாந்திர மற்றும் இடைக்கால தேர்வுகளை நடத்திய தனியார் பள்ளிகள், அவர்கள் நடத்திய தேர்வின் அடிப்படையில் முடிவை அறிவிப்பதன் மூலம் தங்கள் மாணவர்களை மேலும் ஊக்குவிக்க முடியும்.

இருப்பினும், இடைக்கால தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்ட மற்றும் வருடாந்திர தேர்வுகளை நடத்த முடியாத அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இடைக்கால தேர்வுகளின் அடிப்படையில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் முடிவுகளை அறிவிக்கும் என்றும் துணை முதல்வர் கூறியுள்ளார்.

இடைக்கால தேர்வுகள் கூட நடத்தப்படாத அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்,  2 பாடங்களின் அடிப்படையில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தள்ளார். டெல்லி அரசு பள்ளிகளின் 9 மற்றும் 11 வகுப்புகளின் முடிவுகள் ஜூன் 22, 2021 அன்று அறிவிக்கப்படும்.

மேலும் கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்க முடியும் என்றும், எஸ்.எம்.எஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலம் மாணவர்களுக்கு அவர்களின் முடிவுகள் குறித்து தெரிவிக்கும்படி டெல்லி அரசு பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது என்றும் மணீஷ் கூறியுள்ளார்.

Published by
Hema

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

5 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

5 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

5 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

7 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

7 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

8 hours ago