மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டம் வலுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக வடமகிழக்கு மாநிலங்களில் போராட்டம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக, டெல்லியில் ஜமியா மிலியா இஸ்லாமிய கல்லூரியில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது போலீசார் கல்லூரி வளாகத்தில் உள்புகுந்து தாக்குதல் நடத்தினர். இதற்கு எதிராக அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், ஹைதிராபாத் மௌலானா அசாத் பல்கலைக்கழகம், மும்பை ஐஐடி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதில் போராட்டம் விடிய விடிய நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தின் பேருந்துகளுக்கு தீவைக்கப்பட்டிருந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட மாணவர்கள் ராத்திரியில் போலீஸ் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு பின்னர் அதிகாலை விடுவிக்கப்பட்டனர். மாணவர்கள் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
தற்போது போராட்டத்தின் போது பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது 2 வழக்குகள் பதியபட்டுள்ளன.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…