போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி! பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக 2 வழக்குகள்!

Published by
மணிகண்டன்
  • குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
  • டெல்லியில் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. தற்போது பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக கூறி வழக்கு பதியபட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டம் வலுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக வடமகிழக்கு மாநிலங்களில் போராட்டம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக, டெல்லியில் ஜமியா மிலியா இஸ்லாமிய கல்லூரியில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது போலீசார் கல்லூரி வளாகத்தில் உள்புகுந்து தாக்குதல் நடத்தினர். இதற்கு எதிராக அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், ஹைதிராபாத் மௌலானா அசாத் பல்கலைக்கழகம், மும்பை ஐஐடி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதில் போராட்டம் விடிய விடிய நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தின் பேருந்துகளுக்கு தீவைக்கப்பட்டிருந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட மாணவர்கள் ராத்திரியில் போலீஸ் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு பின்னர் அதிகாலை விடுவிக்கப்பட்டனர். மாணவர்கள் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

தற்போது போராட்டத்தின் போது பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது 2 வழக்குகள் பதியபட்டுள்ளன.

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

3 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

4 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

5 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

5 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

7 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

8 hours ago