Categories: இந்தியா

#Delhiriotscase: டெல்லி கலவர வழக்கில் 9 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

2020-ஆம் ஆண்டு வடகிழக்கு டெல்லி கலவர வழக்கில் 9 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

2020-ஆம் ஆண்டு வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 9 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வகுப்புக் கலவரம், நமது தேசத்தின் குடிமக்கள் மத்தியில் சகோதரத்துவ உணர்வுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், வகுப்புவாத கலவரங்கள் பொது சீர்கேட்டின் மிகவும் வன்முறை வடிவங்களில் ஒன்றாக கருதப்படுகின்றன. குற்றவாளிகளின் செயல்கள் நாட்டின் சமூக கட்டமைப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் ஆழமான வடுவை ஏற்படுத்தியது, மக்களிடையே பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்தியது மற்றும் சமூகத்தில் உள்ள மத நல்லிணக்கத்தை பாதிக்கிறது என்றும் நீதிமன்றம் கூறியது.

இதனிடையே, டெல்லி கலவர வழக்கில் மார்ச் 13 அன்று, குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரசுத் தரப்பால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், டெல்லி கலவர வழக்கில் 9 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது டெல்லி நீதிமன்றம்.

அதன்படி, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 436 (வீடு போன்றவற்றை அழிக்கும் நோக்கத்துடன் தீ அல்லது வெடிமருந்து மூலம் தீங்கு செய்தல்) தண்டனைக்குரிய குற்றத்திற்காக அனைத்து குற்றவாளிகளும் 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு குற்றவாளியும் ரூ.20,000 அபராதம் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

8 minutes ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

29 minutes ago

ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா? – நடந்தது என்ன? விமானப்படை பதில்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…

29 minutes ago

திடீரென மயக்கம் போட்ட விஷால்…இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…

44 minutes ago

சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!

மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…

1 hour ago

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

2 hours ago