கொரோனா வைரஸின் பாதிப்பை குறைத்து காட்டிய ஆசியாவின் பெரிய குடிசை பகுதியான தாராவி, உலக சுகாதார அமைப்பிடம் பாராட்டுகளைப் பெற்றது.
கொரோனா வைரஸின் தாக்குதல் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேவருகிறது. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதில் குறிப்பாக, மஹாராஷ்டிராவில் தான் கொரோனா தொற்று அதிகரித்து காணப்பட்டது.
அம்மாநில தலைநகரான மும்பையிலுள்ள மிக பெரிய குடிசை குடியிருப்பு பகுதி தான் தாராவி. அங்கு முதல் கொரோனா தொற்று உறுதியான பொது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வந்தது. அதற்க்கு முக்கியமான காரணம், அந்த பகுதி மிகவும் நெருக்கமான பகுதியாகும்.
அங்கு கொரோனா தொற்று அதிகரித்து வரும் நேரத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரமாக பின்பற்றினார்கள். அதன்காரணமாக, நாள் ஒன்றுக்கு 100-க்கும் மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஜூன் மாதத்தில் அந்த எண்ணிக்கை 18 ஆக சரிந்தது.
தற்பொழுது அந்த எண்ணிக்கையும் முறியடித்து, அதற்கும் கீழான எண்ணிக்கையே காணப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 1 முதல் 12 வரையிலான தொற்றுகளே உறுதிசெய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு, நெருக்கமான குடிசை குடியிருப்பில் வாழ்ந்தாலும், கொரோனாவுக்கு எதிராக அதிகம் போராடி ஜெயித்துள்ளதால், உலக சுகாதார அமைப்பு “தாராவிகர்கள்” என அந்த பகுதி மக்களை புகழ்ந்து வருகிறது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…