புகைப்படத்தால் நடந்த விபரீதம்., 5 நாட்களில் இரண்டு திருமணம் செய்த மென்பொருள் பொறியாளர்.!

Published by
பாலா கலியமூர்த்தி

26 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவர் மத்திய பிரதேசத்தில் ஐந்து நாட்களில் இரண்டு பெண்களை மணந்து பின்னர் தப்பிச் சென்றதாக புகார்.

மத்திய பிரதேசம் கண்ட்வாவில் நேற்று முன்தினம் ஒரு பெண்ணின் குடும்பத்தினர் அளித்த மோசடி புகாரின் அடிப்படையில், இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக காவல் நிலைய ஆய்வாளர் பி.எல் மாண்ட்லோய் தெரிவித்துள்ளார்.  இந்தூர், முசாகேடி பகுதியை சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட நபர், டிசம்பர் 2-ஆம் தேதி காண்ட்வாவில் ஒரு பெண்ணையும், டிசம்பர் 7-ஆம் தேதி இந்தூரில் உள்ள மோவ் என்ற இடத்தில் மற்றொரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்தூரில் திருமண விருந்துக்குச் சென்ற காண்ட்வாவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் ஒருவர், ஐந்து நாட்களில் முன்பு குற்றம் சாட்டப்பட்டவரின் இரண்டாவது திருமணத்தின் புகைப்படங்களை அவரது குடும்பத்தினருக்கு அனுப்பியதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, குற்றச்சாட்டப்பட்டவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி காண்ட்வா பெண்ணின் குடும்பத்தினர் போலீஸ் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், குடும்பம் மணமகனுக்கு வழங்கப்பட்ட திருமணம் மற்றும் வீட்டு உபயோகத்திற்காக ரூ.10 லட்சம் செலவாகியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர், பெண்ணை திருமணம் செய்த பின்னர், இந்தூரில் உள்ள தனது இடத்திற்கு அழைத்துச் சென்றார் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு பிறகு வேலைகளுக்காக அவர் போபாலுக்குச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய மோவ் சென்றுள்ளார் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளனர். டிசம்பர் 2ம் தேதி, குற்றம் சாட்டப்பட்டவர் தனது பெற்றோர், சகோதரர்கள், சகோதரி மற்றும் பிற உறவினர்களுடன் இங்கு திருமணத்திற்கு வந்திருந்தார் கூறியுள்ளனர்.

இந்தூரில் திருமணம் செய்துகொண்ட பெண்ணுடன், காண்ட்வாவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் பேசியபோது, தனது திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, கட்டாயப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில், டிசம்பர் 7 க்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட மென்பொருள் பொறியாளர் வீடு திரும்பவில்லை எனவும் அவரது தொலைபேசியும்  துண்டிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரி கூறியுள்ளார். தலைமறைவாக உள்ள குற்றவாளியை காவல்துறை தேடி வருவதாகவும் ககுறிப்பிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

6 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

6 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

7 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

8 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

8 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

9 hours ago