Categories: இந்தியா

நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து பேட்டியளிக்க கூடாது – தலைமை நீதிபதி உத்தரவு!

Published by
பாலா கலியமூர்த்தி

நிலுவை வழக்குகள் குறித்து நீதிபதிகள் ஊடகங்களில் பேட்டியளிக்கக் கூடாது  என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு.

தங்கள் முன் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து நீதிபதிகள் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டுள்ளார். மேற்கு வங்க அரசு பள்ளி ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பாக, கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து 4 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

மேற்கு வங்காளத்தில் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் அவரது பெஞ்ச் மூலம் தீர்ப்பளிக்கப்பட்டு, தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியின் நடத்தை குறித்து கேள்வி எழுப்பிய பின்னர், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து நீதிபதிகள் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்தல், அவர்களால் வழக்கை விசாரிக்க முடியாது. அதில் நாங்கள் முற்றிலும் தெளிவாக இருக்கிறோம் என்று நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா அடங்கிய அமர்வு திட்டவட்டமாக கூறியுள்ளது.

 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ராஜ்ய சபா சீட் குறித்து இ.பி.எஸ் சொன்னது என்ன..? பிரேமலதா சொன்ன பதில்!

ராஜ்ய சபா சீட் குறித்து இ.பி.எஸ் சொன்னது என்ன..? பிரேமலதா சொன்ன பதில்!

சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா, 2026 சட்டமன்றத்…

5 minutes ago

“கடும் விளைவுகளை சந்திப்பார்”! புது கட்சி தொடங்கிய மஸ்கிற்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு முழு ஆதரவு அளித்த தொழிலதிபர் எலான் மஸ்க், ட்ரம்ப் மீண்டும்…

2 hours ago

தக் லைஃப் படத்திற்காக சிம்புவை விட அதிக சம்பளம் வாங்கிய த்ரிஷா?

சென்னை : தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான தக் லைஃப் படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இப்படத்தில்…

3 hours ago

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மணிப்பூராக மாற்றிவிடுவார்கள்…ஆர்.எஸ்.பாரதி பதிலடி!

சென்னை : நேற்று மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு  திமுகவை…

4 hours ago

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை…நாளை இந்த 9 மாவட்டங்களில் வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,நாளை பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்…

4 hours ago

நேஷன்ஸ் லீக் கால்பந்து: ஸ்பெயினை வீழ்த்தி கோப்பையை வென்ற போர்ச்சுகல்!

பெர்லின் : 2024-25 நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையே நள்ளிரவு…

4 hours ago