நிலுவை வழக்குகள் குறித்து நீதிபதிகள் ஊடகங்களில் பேட்டியளிக்கக் கூடாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு.
தங்கள் முன் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து நீதிபதிகள் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டுள்ளார். மேற்கு வங்க அரசு பள்ளி ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பாக, கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து 4 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
மேற்கு வங்காளத்தில் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் அவரது பெஞ்ச் மூலம் தீர்ப்பளிக்கப்பட்டு, தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியின் நடத்தை குறித்து கேள்வி எழுப்பிய பின்னர், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து நீதிபதிகள் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்தல், அவர்களால் வழக்கை விசாரிக்க முடியாது. அதில் நாங்கள் முற்றிலும் தெளிவாக இருக்கிறோம் என்று நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா அடங்கிய அமர்வு திட்டவட்டமாக கூறியுள்ளது.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…