யார் பலமானவர்கள்..? ஆரோக்கியமான உடலைக் கொண்டு தொடர்ந்து ஜிம்மிற்குச் செல்பவரா..? மனதளவில் ஆரோக்கியமாக உள்ளதவர்களா..? இந்த கேள்வி சமீபத்திய நிகழ்வுகளால் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, நேற்று கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் வழக்கைக் கவனியுங்கள் அவர் மட்டும் 46 வயதில் மாரடைப்பால் உயிரிழக்கவில்லை. கடந்த மாதம் நடிகர் சித்தார்த் சுக்லா (41), மற்றும் கடந்த ஆண்டு நடிகர் சிரஞ்சீவி சர்ஜா (36) மாரடைப்பால் காலமானார்.
20-25 ஆண்டுகளுக்கு முன்பு 30 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதினருக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை மாரடைப்பு ஏற்படுவதை பார்த்தோம். ஆனால் இப்போது ஒவ்வொரு வாரமும், இதுபோன்ற வழக்குகள் பதிவாகின்றன என்று டாக்டர் ரமாகந்தா பாண்டா கூறினார். நேற்று ரிபப்ளிக் மீடியா நெட்வொர்க்குடன் ஆசியா ஹார்ட் இன்ஸ்டிட்யூட் பிரத்யேக உரையாடலில் பத்ம பூஷன் விருது பெற்றவரும், இந்தியாவின் சிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவருமான டாக்டர். பாண்டா கூறுகையில், உடற்பயிற்சி செய்வதால் நல்ல மற்றும் கெட்ட விளைவுகள் இருப்பதாகவும், அதை ஒருவர் எப்படிச் செய்கிறார் என்பதைப் பொறுத்து இருப்பதாகவும் கூறினார்.
சரியாக உடற்பயிற்சி செய்வதற்கான வழிகளை டாக்டர் ரமாகந்தா பாண்டா பட்டியலிட்டார். உடலுக்கு மிதமான உடற்பயிற்சி தேவை என்று குறிப்பிட்டார். குறைந்த அளவு அல்லது அதிக அளவிலான உடல் செயல்பாடு பாதகமான விளைவுகளுக்கு வழிவகுக்கும். இதில் இதய நோய்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. சரியாக – மிதமாக உடற்பயிற்சி செய்வது எப்படி என்பது இங்கே பார்க்கலாம்.
5-10 நிமிடங்கள் வார்ம்-அப் செய்யுங்கள்,
20-30 நிமிட உடற்பயிற்சி,
உடலை குளிர்விக்க 5-10 நிமிடங்கள் என டாக்டர் பாண்டா பரிந்துரைத்தார். “உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மக்கள் கண்காணிக்க வேண்டும். மார்பின் இடது பக்கத்தில் வலி ஏற்பட்டால், மூட்டுகளில் வலிகள் இருந்தால், அதை ஒருவர் புறக்கணிக்கக்கூடாது. உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…