யார் பலமானவர்கள்..? ஆரோக்கியமான உடலைக் கொண்டு தொடர்ந்து ஜிம்மிற்குச் செல்பவரா..? மனதளவில் ஆரோக்கியமாக உள்ளதவர்களா..? இந்த கேள்வி சமீபத்திய நிகழ்வுகளால் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, நேற்று கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் வழக்கைக் கவனியுங்கள் அவர் மட்டும் 46 வயதில் மாரடைப்பால் உயிரிழக்கவில்லை. கடந்த மாதம் நடிகர் சித்தார்த் சுக்லா (41), மற்றும் கடந்த ஆண்டு நடிகர் சிரஞ்சீவி சர்ஜா (36) மாரடைப்பால் காலமானார்.
20-25 ஆண்டுகளுக்கு முன்பு 30 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதினருக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை மாரடைப்பு ஏற்படுவதை பார்த்தோம். ஆனால் இப்போது ஒவ்வொரு வாரமும், இதுபோன்ற வழக்குகள் பதிவாகின்றன என்று டாக்டர் ரமாகந்தா பாண்டா கூறினார். நேற்று ரிபப்ளிக் மீடியா நெட்வொர்க்குடன் ஆசியா ஹார்ட் இன்ஸ்டிட்யூட் பிரத்யேக உரையாடலில் பத்ம பூஷன் விருது பெற்றவரும், இந்தியாவின் சிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவருமான டாக்டர். பாண்டா கூறுகையில், உடற்பயிற்சி செய்வதால் நல்ல மற்றும் கெட்ட விளைவுகள் இருப்பதாகவும், அதை ஒருவர் எப்படிச் செய்கிறார் என்பதைப் பொறுத்து இருப்பதாகவும் கூறினார்.
சரியாக உடற்பயிற்சி செய்வதற்கான வழிகளை டாக்டர் ரமாகந்தா பாண்டா பட்டியலிட்டார். உடலுக்கு மிதமான உடற்பயிற்சி தேவை என்று குறிப்பிட்டார். குறைந்த அளவு அல்லது அதிக அளவிலான உடல் செயல்பாடு பாதகமான விளைவுகளுக்கு வழிவகுக்கும். இதில் இதய நோய்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. சரியாக – மிதமாக உடற்பயிற்சி செய்வது எப்படி என்பது இங்கே பார்க்கலாம்.
5-10 நிமிடங்கள் வார்ம்-அப் செய்யுங்கள்,
20-30 நிமிட உடற்பயிற்சி,
உடலை குளிர்விக்க 5-10 நிமிடங்கள் என டாக்டர் பாண்டா பரிந்துரைத்தார். “உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மக்கள் கண்காணிக்க வேண்டும். மார்பின் இடது பக்கத்தில் வலி ஏற்பட்டால், மூட்டுகளில் வலிகள் இருந்தால், அதை ஒருவர் புறக்கணிக்கக்கூடாது. உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என தெரிவித்தார்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…