மருத்துவர்கள் அதிர்ச்சி : இந்தியாவில் முதன் முறையாக கொரோனா நோயாளியை தாக்கிய தோல் பூஞ்சை நோய்!

Published by
Rebekal

இந்தியாவிலேயே முதன்முறையாக கர்நாடகாவில் கொரோனா நோயாளி ஒருவரை தோல் பூஞ்சை நோய் தாக்கியுள்ளது மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் தினமும் உயிரிழந்து வரும் நிலையில், கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சவாலாக தற்போது கருப்பு பூஞ்சை நோய் பரவி வருகிறது. அது மட்டுமல்லாமல், வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை நோயும் பரவி வருகிறது. இவற்றின் தாக்கங்களே  இன்னும் குறையாத நிலையில் தற்பொழுது கொரோனா நோயாளி ஒருவரை இந்தியாவிலேயே முதன்முறையாக தோல் பூஞ்சை நோய் தாக்கியிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா மாவட்டம் சிக்கலாபுரா கிராமத்தை சேர்ந்த 50 வயது நபரொருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சித்ரதுர்காவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பொழுது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து அந்த மருத்துவமனையிலேயே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.

இதனை அடுத்து தற்போது அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் அவரது காது பகுதியில் பூஞ்சை உருவாகி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதனை அடுத்து இது குறித்து மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனைகளில் தோல் பூஞ்சை நோய் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தோல் பூஞ்சை நோய் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தி விடலாம் எனவும், இது மற்ற பூஞ்சைகளை போல ஒருவரிடமிருந்து ஒருவருக்கு பரவாது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த தோல் பூஞ்சை தாக்கிய நபரை மருத்துவர்கள் சிகிச்சைக்காக மைசூரில் உள்ள அரசு காது, மூக்கு பிரிவு சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஏற்கனவே கருப்பு, மஞ்சள், வெள்ளை போன்ற பூஞ்சை தொற்றுகள் தாக்கமே இன்னும் குறையாத நிலையில் தற்பொழுது தோல் பூஞ்சை நோய் இந்தியாவில் முதன்முறையாக ஒருவருக்கு பரவியிருப்பது மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

25 minutes ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

43 minutes ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

2 hours ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

2 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

2 hours ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

3 hours ago