மருத்துவர்கள் அதிர்ச்சி : இந்தியாவில் முதன் முறையாக கொரோனா நோயாளியை தாக்கிய தோல் பூஞ்சை நோய்!

Published by
Rebekal

இந்தியாவிலேயே முதன்முறையாக கர்நாடகாவில் கொரோனா நோயாளி ஒருவரை தோல் பூஞ்சை நோய் தாக்கியுள்ளது மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் தினமும் உயிரிழந்து வரும் நிலையில், கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சவாலாக தற்போது கருப்பு பூஞ்சை நோய் பரவி வருகிறது. அது மட்டுமல்லாமல், வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை நோயும் பரவி வருகிறது. இவற்றின் தாக்கங்களே  இன்னும் குறையாத நிலையில் தற்பொழுது கொரோனா நோயாளி ஒருவரை இந்தியாவிலேயே முதன்முறையாக தோல் பூஞ்சை நோய் தாக்கியிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா மாவட்டம் சிக்கலாபுரா கிராமத்தை சேர்ந்த 50 வயது நபரொருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சித்ரதுர்காவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பொழுது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து அந்த மருத்துவமனையிலேயே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.

இதனை அடுத்து தற்போது அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் அவரது காது பகுதியில் பூஞ்சை உருவாகி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதனை அடுத்து இது குறித்து மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனைகளில் தோல் பூஞ்சை நோய் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தோல் பூஞ்சை நோய் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தி விடலாம் எனவும், இது மற்ற பூஞ்சைகளை போல ஒருவரிடமிருந்து ஒருவருக்கு பரவாது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த தோல் பூஞ்சை தாக்கிய நபரை மருத்துவர்கள் சிகிச்சைக்காக மைசூரில் உள்ள அரசு காது, மூக்கு பிரிவு சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஏற்கனவே கருப்பு, மஞ்சள், வெள்ளை போன்ற பூஞ்சை தொற்றுகள் தாக்கமே இன்னும் குறையாத நிலையில் தற்பொழுது தோல் பூஞ்சை நோய் இந்தியாவில் முதன்முறையாக ஒருவருக்கு பரவியிருப்பது மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

5 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

5 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

6 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

7 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

7 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

7 hours ago