மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக அவரவர் செல்போன்களில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பாதிப்பும், உயிரிழப்பும் தினந்தோறும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த ஒரே வழி, அதற்கு மருந்து கண்டுபிடிப்பதும், மக்கள் சமூக விலகலை பின்பற்றுவதும் மிக அவசியம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனிடையே காணொலிக்காட்சி மூலம் பேசிய பிரதமர் மோடி கொரோனா தொடர்பான தகவலை தெரிந்துகொள்ள ஆரோக்கிய சேது செயலியை அனைவரும் செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திருந்தார். இதற்குமுன் ஸ்மார்ட்போன் நிறுவனங்களிடம் புதிய செல்போன்களில் இந்த செயலியை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்ட போது, ஊரடங்கால் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இதையடுத்து அனைத்து மாநில முதல்வர்களுடன் கொரோனா குறித்து ஆலோசனை மேற்கொண்ட போது ஆரோக்கிய சேது செயலியை அனைவரிடமும் பிரபலப்படுத்துங்கள் என்றும் சிங்கப்பூர், தென்கொரிய போன்ற நாடுகளில் இதுபோன்று செயலிகளின் உதவியால் கொரோனா பாதிப்புகளை உடனுக்குடன் கண்டறிந்து சிகிச்சையளித்ததால் பலன் ஏற்பட்டிருக்கு என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக அவரவர் செல்போன்களில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மக்கள் கொரோனா தாக்கத்தை புரிந்துகொண்டு, அதனை பற்றி தெரிந்துகொள்ள இதுவரை ஆரோக்கிய செயலியை 5 கோடிக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரோக்கிய சேது செயலியின் சிறப்பு :
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…