மேற்கு வங்கத்தில் உள்ள பபானிபூர், சம்சர்கஞ்ச், ஜாங்கிர்பூர் ஆகிய தொகுதிகளுக்கு வரும் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிப்பு.
சமீபத்தில் நடந்த மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் கட்சி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3 ஆம் தேதி எண்ணப்படுகிறது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள பபானிபூர், சம்சர்கஞ்ச், ஜாங்கிர்பூர் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி பபானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார் என கூறப்படுகிறது. மம்தா பானர்ஜி பபானிபூர் தொகுதியில் 2011, 2016-ல் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.
சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு பாஜக சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். தற்போது மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளதால் 6 மாதத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…