நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பணமோசடி வழக்கில் மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்கை அமலாக்க இயக்குனரகம் கைது செய்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மகாராஷ்டிரா அமைச்சருமான நவாப் மாலிக் வீட்டிற்கு காலை 7 மணிக்கு சென்ற அமலாக்கத்துறை சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு நவாப் மாலிக்கை தங்களுடன் அழைத்துச் சென்றது. அங்கிருந்து மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திதிற்கு நவாப் மாலிக்கை அழைத்து சென்றனர். பின்னர், ஆறு மணி நேர விசாரணைக்குப் பிறகு நவாப் மாலிக்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
நவாப் மாலிக் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கோபத்தில் உள்ளனர். நவாப் மாலிக் விசாரிக்கப்பட்ட அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வெளியேசி ஆர்பிஎப் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. அதனால், இப்பகுதி போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டத்தை சார்ந்தவர்கள் மும்பையில் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பான பணபரிவர்த்தனையில் நவாப் மாலிக்கிற்கு தொடர்பு உள்ளது என குற்றம் சாட்டியுள்ளது.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…