3000 மான்கள் ஒரே இடத்தில் துள்ளி குதித்து ஓடிய அழகிய காட்சியை பிரதமர் மோடி ரீடிவீட் செய்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள பாவ்நகர் மாவட்டத்தில் உள்ளது வெலவாடர் தேசிய பூங்கா. இந்த பூங்காவில் அதிகளவு இருப்பது மான்கள். அதிலும் அழியும் நிலையில் உள்ள மானினமான பிளாக்பக்(கலைமான்கள்) மான்கள் அதிகளவு உள்ளது. மேலும், இந்த பூங்காவில் பல்வேறு வகையில் இருக்கும் புல்லின வகைகள் உள்ளது.
இதனையடுத்து இந்த இடத்தில் வலசை நேரங்களில் வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வருவது வழக்கம். முக்கியமாக ஃப்ளெமிங்கோ மற்றும் பெலிக்கன்கள் இந்த பூங்காவிற்கு வருகை தரும். தற்போது இந்த வெலவாடர் ப்ளாக்பக் தேசியப் பூங்காவில் அமைந்துள்ள சாலையில் மான்கள் துள்ளி குதித்து ஓடும் காட்சியை பூங்கா நிர்வாகம் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.
மேலும், இந்த காட்சியில் கிட்டத்தட்ட 3000 மான்கள் இருக்கும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த பூங்காவின் அரிய காட்சியை பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் ரீடிவீட் செய்துள்ளார். இந்த காட்சியை பதிவிட்டு ‘எக்ஸலண்ட்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் பிரதமர் மோடி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் மயிலுடன் இருக்கும் காட்சியை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…