அதிர்ச்சி: “மெத்தைகளில் பஞ்சிக்கு பதில் பயன்படுத்தப்பட்ட முகக்கவசம்” தீயிட்டு கொளுத்திய போலீசார்!

Published by
Surya

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை பயன்படுத்தி மெத்தை தயாரிக்கப்பட்ட நிலையில், போலீசார் அதனை தீயிட்டு கொளுத்தினார்கள்.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசங்கள் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகின்றது. மேலும், பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்தவகையில், மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில், பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை பயன்படுத்தி மெத்தை தயாரிப்பதாக மகாராஷ்டிரா தொழில் மேம்பாட்டுக் கழக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

இந்த நிறுவனம், மும்பையில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குசம்பா கிராமத்தில் இயங்கி வருவதாகவும், இதில் பஞ்சிக்கு பதில் பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை வைத்து மெத்தை செய்யப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், கொத்து, கொத்தாக பயன்படுத்த முகக்கவசங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து அங்குள்ள போலீசார், முகக்கவசங்களை கைப்பற்றி, தீயிட்டு கொளுத்தினார்கள். புகாரின் அடிப்படையில் நிறுவனத்தின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. இதில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Published by
Surya

Recent Posts

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

22 minutes ago

“சங்கிகளின் மகிழ்ச்சிக்காக பேசுகிறார் இபிஎஸ்” – எடப்பாடி பழனிசாமிக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…

36 minutes ago

அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…

1 hour ago

லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சோகம்.!

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…

2 hours ago

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா புழல் சிறையில் இருந்து விடுவிப்பு.!

சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…

2 hours ago

பிரதமர் மோடிக்கு உயரிய விருது அளித்து கவுரவித்த நமீபியா அரசு..!!

நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…

3 hours ago