விண்ணில் சீறிப் பாய்ந்தது ‘ஃபால்கன் 9 ராக்கெட்’.., 41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளியில் இந்தியர்..!
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் பயணம் செய்யும் ஆக்சியம் 4 விண்கலம், ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஃபால்கன்-9 ராக்கெட் பல தடைகளை தாண்டி விண்ணில் பாய்ந்தது. முன்னதாக, 6 முறை இந்த விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அனைத்தும் சீரான நிலையில், விண்வெளிக்கு பறந்துள்ளார் இந்தியா விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா.
Liftoff of Ax-4! pic.twitter.com/RHiVFVdnz3
— SpaceX (@SpaceX) June 25, 2025
ஆக்சியம்-4 விண்கலம், புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதள வளாகம் 39A இலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம், இன்று இந்திய நேரப்படி மதியம் 12:01 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஆக்சியம்-4 விண்கத்தில் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா, போலாந்து வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, ஹங்கேரி வீரர் திபோர் கபு மற்றும் அமெரிக்க வீரர் பெக்கி விட்சன் ஆகியோர் உள்ளனர். நாளை மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும். மேலும், குழுவினர் 14 நாட்கள் சுற்றுப்பாதை ஆய்வகத்தில் தங்கி, பல்வேறு அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர் என்றும் நாசா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவற்றால் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மேற்கொள்ளப்படும் நான்காவது தனியார் விண்வெளி வீரர்கள் பயணமாகும். மேலும், ஆக்சியம்-4 (Ax-4) பயணம் இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஏற்கனவே ஏழு விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ் இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்கள் இன்று (ஜூன் 25, 2025) புறப்பட்டனர்.
மைக்ரோகிராவிட்டி சூழலில் தாவர வளர்ச்சி, கணினி திரகள் ஆய்வு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இதில் ஆராய்ச்சி முடிந்ததும், இரண்டு வார கால இடைவெளிக்கு பிறகு பூமிக்குத் திரும்புவார்கள். இந்த பயணம் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கும் முக்கிய மைல்கல்லாக அமைகிறது.
சுபன்ஷு சுக்லா :
இந்திய விமானப்படையைச் சேர்ந்த குரூப் கேப்டனும், இஸ்ரோவின் விண்வெளி வீரருமான இவர், இந்த பயணத்தின் பைலட் ஆவர். 1984-ல் ராகேஷ் ஷர்மா சோவியத் ஒன்றியத்தின் சோயுஸ் விண்கலத்தில் பயணித்த பிறகு, 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு இந்தியர் விண்ணுக்கு செல்கிறார். இதன் மூலம், சுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் முதல் இந்தியர் ஆவார்.
மேலும், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 வீரர்களை வீரர்களும் இந்தியா, போலந்து, மற்றும் ஹங்கரி ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி, 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாடுகளின் மனித விண்வெளி பயணத்தை மீண்டும் தொடங்குகியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025