கணவனை கொன்ற கொலையாளியாக இருந்தாலும் கூட மனைவி குடும்ப ஓய்வூதியத்தினை பெறுவதற்கு தகுதியானவர் தான் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2008 ஆம் ஆண்டிலுள்ள ஒரு கொலை வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் கணவனை கொலை செய்த குற்றவாளியாக இருந்தாலும் கூட அந்த பெண் குடும்ப ஓய்வூதியத்தை பெறுவதற்கு தகுதியானவர் தான் என பரபரப்பான கருத்துக்களை கூறியுள்ளது. குடும்ப ஓய்வூதியம் என்பது அரசு ஊழியர் ஒருவர் இறந்துவிட்டால் வழங்கப்படக்கூடிய ஒரு நிதி உதவி.
இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள தர்செம் சிங் என்பவர் 2008 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட நிலையில், அதற்கான குற்றவாளி அவரது மனைவி தான் என 2011 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு வரை குடும்ப ஓய்வூதியத்தை பெற்று வந்த கொலை செய்யப்பட்ட தர்செம் சிங்கின் மனைவி பால்ஜீத் கவுருக்கு, திடீரென ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஹரியானா அரசாங்கத்தின் மீது போடப்பட்ட வழக்கு குறித்த விசாரணையில், குற்றவாளியாக இருந்தாலும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படலாம் என தற்பொழுது உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை அடுத்து கொடுக்கப்படாமல் நிலுவையில் இருந்த தொகையையும், இனி உள்ள ஓய்வூதியத்தையும் முறையாக வழங்க வேண்டும் என இது சம்மந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…
மதுரை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் க்ளென் மேக்ஸ்வெல்லும் ஒருவர். நடப்பாண்டு ஐபிஎல்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, படத்தை சூர்யா…
சென்னை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ' ஜனநாயகன்' பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…
சென்னை : கோடை காலம் ஆரம்பித்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயிலின் அளவு 100…