புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களாக போராடி வரும் விவசாயிகள் இன்று நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை வலுப்படுத்துவதற்க்காக சாலை மறியல், போட்டோ போராட்டம், உண்ணாவிரதம் மற்றும் டிராக்டர் போராட்டம் போன்ற புதிய போராட்டங்களையும் அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள நிலையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், இன்று போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக நாடு முழுவதிலும் ரயில் மறியல் போராட்டத்தை விவசாயிகள் கையில் எடுத்துள்ளனர்.
அதன்படி வியாழக்கிழமையான இன்று பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் ரயில் மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விவசாயிகள் ஒரு புறம் தீவிரமாக மேற்கொண்டு வந்தாலும், ரயில்வே அதிகாரிகள் நாடு முழுவதும் ரயில் போக்குவரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ரயில் மறியல் போராட்டத்தை தடுத்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…