டிசம்பர் 2017க்கு முன்னர் விற்கப்பட்ட வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம் என மத்திய சாலை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
ஃபாஸ்டேக் நடைமுறை என்பது ஆர்.எஃப்.ஐ.டி எனும் ரேடியோ அதிர்வெண் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அடையாளம் ஆகும். அந்த ஃபாஸ்டேக் கணக்கானது, பயனர் சேமிப்பு கணக்கில் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும். இதனால், வாகனத்தினை டோல் பிளாசாவில் நிறுத்தாமல் வாகனத்தின் கண்ணாடியில் ஒட்டப்பட்டு இருக்கும் ஃபாஸ்டேக் அடையாள எண்ணின் மூலம் டோல் கட்டணம் வசூலித்து கொள்ளப்படும்.
இந்த நடைமுறையானது கடந்தாண்டு அக்டோபரில் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தது. இருந்தும் பல வாகனங்களில் ஃபாஸ்டேக் கணக்கு தொடங்கப்பெறாமல், டோல் பிளாசாவில் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
தற்போது அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் படி, டிசம்பர் 2017க்கு முன்னர் விற்கப்பட்ட வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம் எனவும், இனி ஆர்டிஓ ஆபிசில் வாகனத்தை புதுப்பித்து காண்பிக்கவரும் அனைவரது வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கணக்கு கட்டாயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…