ஜம்மு காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை தொடர்ந்து.பாகிஸ்தான் பல வகையில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்திய சுதந்திர தினத்தன்று பாகிஸ்தான் கருப்பு தினமாக கடைப்பிடித்தனர்.
ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை கூறி லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு இந்திய சுதந்திர தினத்தன்று பாகிஸ்தான் நாட்டை சார்ந்த சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது இந்திய தேசிய கொடியை கிழிந்தும் , காலால் மிதித்தும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை பார்த்த இந்தியாவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் ஓடி சென்று கீழே கிடந்த தேசிய கொடியும் , பாகிஸ்தானை சேர்ந்த ஒரு கையில் இருந்த தேசிய கொடியையும் பறித்தார்.
அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இது குறித்து அந்த பெண் பத்திரிக்கையாளர் பூணம் கூறுகையில் , தேசிய கொடி மிதிக்கப்பட்டதும் நான் போராட்டம் நடைபெறும் இடத்தில் கீழே இருந்த கொடியையும் , பாகிஸ்தான் நாட்டை சார்ந்த ஒருவர் கையில் இருந்த கொடியை பறித்தேன்.
இவ்வளவு கேவலமான போராட்டத்தை நான் பார்த்ததில்லை. இந்நிலையில் போராட்ட கூட்டத்திற்குள் புகுந்து இந்திய தேசிய கொடியை காப்பாற்றிய பத்திரிகையாளர் பூணத்தை பலர் சமூக வலைத்தளத்தில் பாராட்டி வருகின்றனர்.
ரஷ்யாவும் உக்ரைனும் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இன்று, ஜூன் 2, 2025 அன்று இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த…
நார்வே : செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் மே 26 முதல் ஜூன் 6 வரை…
சென்னை : தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, இன்று (ஜூன் 2, 2025) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த…
சென்னை : தமிழ் திரையுலகில் மதயானைக் கூட்டம் மற்றும் ராவண கோட்டம் ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் விக்ரம்…
அகமதாபாத் : 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி பெங்களூர் அணிக்கு எதிரான முதல் தகுதிச்சுற்று போட்டியில் விளையாடியபோது…
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…