Categories: இந்தியா

காதலனுடன் சண்டை ! ரயில் முன் பாய்ந்த காதலி.. பத பதைக்கும் வீடியோ !

Published by
அகில் R

உத்தரபிரேதேசம் : ஆக்ராவில் இளம் பெண் ஒருவர் ஓடும் ரயில் முன் பாய்ந்த சிசிடிவியில் பதிவான நெஞ்சை பதபதைக்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த திங்கள்கிழமை (மே-27) அன்று காலை 11 மணி அளவில், உத்திரபிரதேசம் மாநிலம், ஆக்ராவில் உள்ள ராஜா கி மண்டி என்ற ரயில் நிலையத்தில் இந்த அதிர்ச்சியான சம்பவம் அரங்கேறி உள்ளது. அந்த ரயில் நிலையத்தின் நடைமேடை-1ல் ஒரு காதல் ஜோடிகள் பேசி கொண்டு இருப்பார்கள்.

அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட காரணத்தால் அந்த இளம் பெண் ரயில் வருவது தெரிந்தும் அந்த தண்டவாளத்தில் குதித்து காதலனுடன் தகராறில் ஈடு படுவார். அப்போது ரயில் அருகில் வருவது தெரிந்தவுடன் நடைமேடை அருகில் வந்து நிற்பார். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த இளம் பெண்ணை தண்டவாளத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இழுத்து சென்றுவிடும்.

இந்த அதிர்ச்சியான சம்பவம் அந்த நடைமேடை-1ல் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. 33 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில் அந்த பெண் ரயில் வருவது தெரிந்தும் நடைமேடையிலிருந்து தண்டவாளத்தில் குதிப்பதை காணலாம். காதலுடன் வாக்கு வாதத்தில் இருந்த அந்த பெண்ணை கேரளா ரயில் இழுத்து செல்வதையும் அந்த வீடியோவில் நாம் காணலாம்.

மேலும், இது நடந்த சிறுது நேரத்தில் அந்த காதலன் அங்கிருந்து தப்பி ஓடியிருப்பார், அந்த காட்சிகளும் கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த சம்பவத்துக்கு பிறகு, படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் அந்த பெண்ணை ரயில்வே துறை காவல் அதிகாரிகளால் சிகிச்சைக்காக எஸ்என் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த பெண் யார் என்ற அடையாளத்தை கண்டறியும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Published by
அகில் R

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

24 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

54 minutes ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

2 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

9 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

9 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago