உடனடியாக பெட்ரோல் டேங்கை நிரப்புங்கள் – ராகுல் காந்தி ட்வீட்

Published by
பாலா கலியமூர்த்தி

நாட்டில் உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் உத்தரபிரதேசத்தில் 6 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இறுதி கட்ட வாக்குப்பதிவு வரும் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. மணிப்பூரில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

மார்ச் 7-ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்து மார்ச் 10-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனிடையே, 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து பல நாட்களாக நீடித்து வருகிறது. சென்னையைப் பொறுத்தவரையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையைப் பொறுத்தவரையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.91.43 ஆக உள்ளது. கடந்த நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

கச்சா எண்ணெய் விலை ஒருபக்கம் உயர்ந்துகொண்டே சென்று தற்போது பேரலுக்கு 111 டாலரை தொட்டுள்ளது. இருப்பினும் 5 மாநில தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யவில்லை என்றும் 5 மாநில தேர்தல் தேர்தல் முடிந்தபின் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அதன்படி, இந்தியாவில் பெட்ரோல் விலை கிட்டத்தட்ட 12 முதல் 15  ரூபாய் வரை உயரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், அடுத்த வாரம் மாநில சட்டமன்ற தேர்தல்கள் முடிவடையும் நிலையில், பெட்ரோல் டீசல் விலை தினசரி தொடர்ந்து உயரும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,  மக்களே உடனடியாக பெட்ரோல் டேங்கை முழுவதுமாக நிரப்புங்கள். பிரதமர் மோடியின் அரசின் தேர்தல் சலுகைகள் முடிவுக்கு வரப்போகிறது என தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

2 hours ago

அண்ணா பெயரை உச்சரிக்க திமுகவுக்கு அருகதை இருக்கிறதா? – இபிஎஸ் கேள்வி

சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…

3 hours ago

கருப்புபெட்டி தரவுகள் மீட்பு! விரைவில் விமான விபத்துக்கான காரணம்!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…

4 hours ago

விஜய் இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? திருமாவளவன் கேள்வி!

சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…

4 hours ago

தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஷாக்? பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு?

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…

4 hours ago

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

5 hours ago