இந்தூரில் இரண்டு மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இரண்டு மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். மேலும், தீ விபத்து தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றும் அலட்சியம் காட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சவுகான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தூரில் உள்ள ஸ்வர்ணா பாக் காலனியில் உள்ள இரட்டை மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். முதற்கட்ட தகவலின்படி, வீட்டின் உள்ளே ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என இந்தூர் போலீஸ் கமிஷனர் ஹரிநாராயண் சரி மிஸ்ரா தெரிவித்தார். இந்த விபத்தில் ஏழு பேர் இறந்துள்ள நிலையில், 9 பேர் இதுவரை சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர் என்றார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…