மேற்கு வங்கத்தில் பட்டாசு வெடிக்க, விற்க தடை..!

Published by
murugan

மேற்கு வங்கத்தில் தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்களில் பட்டாசு வெடிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

மேற்கு வங்கத்தில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கக் கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி சப்யசாசி பட்டாச்சார்யா மற்றும் நீதிபதி அனிருத்தா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸின் நெருக்கடியை சமாளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் தீபாவளிக்கு பிறகு மாசு பிரச்னையை தவிர்க்கும் வகையில் பட்டாசு வெடிக்க கூடாது என மாநில அரசுக்கு கல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வகையில் தீபாவளி, சத் பூஜை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளின் போது பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதித்து கல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

தடையை மீறி பட்டாசுகளை விற்பனை செய்பவர்கள் , பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது. தீபாவளி மற்றும் காளி பூஜையின் போது பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதித்த மேற்கு வங்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் அனுமதி வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

10 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

12 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

15 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

16 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

18 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

19 hours ago