பஞ்சாப் மாநிலத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூலை 26 ஆம் தேதி பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியதால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன்படி, பஞ்சாப் மாநிலத்தில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மே மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
பின்னர் கொரோனா தொற்று குறைய தொடங்கிய காரணத்தால் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. தற்போது மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்ததை அடுத்து, மாநிலத்தில் உள்ள பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜூலை 26 ஆம் தேதியிலிருந்து பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தடுப்பூசி செலுத்திய பிறகே பள்ளிக்கு அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…