தமிழகத்தை தொடர்ந்து மேற்கு வங்காளத்திற்கு அமித் ஷா பயணம்..!

Published by
murugan

அடுத்த ஆண்டு மேற்கு வங்காளத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அதிகாலை கொல்கத்தா வந்தார். “குருதேவ் தாகூர், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் மற்றும் சியாமா பிரசாத் முகர்ஜி போன்ற பெரியவர்களின் இந்த மரியாதைக்குரிய மண்ணிற்கு நான் தலைவணங்குகிறேன்” என்று அமித் ஷா கொல்கத்தா வந்தபிறகு ட்வீட் செய்தார்.

அமித் ஷா வருகைக்கு இரண்டு நாள் முன்பாக சுவேந்து ஆதிகாரி உட்பட பல திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கட்சியை விட்டு விலகினர், அடுத்த இரண்டு நாட்களில் அவர்கள் பாஜகவில்  இணையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமித் ஷா தனது இரண்டு நாள் பயணத்தின் போது மேற்கு வங்காளத்தின் இரண்டு மேற்கு மாவட்டங்களான மிட்னாபூர் மற்றும் பிர்பூமில் உரையாற்றவும் பொது பேரணிகளில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள ராம்கிருஷ்ணா மிஷன் மற்றும் சித்தேஸ்வரி காளி கோயிலுக்கு மத்திய அமைச்சர் வருகை தர திட்டமிட்டுள்ளார். மேலும், மிட்னாபூரில் உள்ள பெலிஜூரி கிராமத்தில் உள்ள ஒரு விவசாயி இல்லத்தில் அமித் ஷா மதிய உணவு சாப்பிடுயுள்ளார்.

பின்னர், அமித் ஷா கொல்கத்தா திரும்புவார், கொல்கத்தாவின் ராஜர்ஹாட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு நடைபெறும் என கூறப்படுகிறது.  அடுத்த ஆண்டு தமிழகத்திலும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அமித் ஷா இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்க்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

20 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

23 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago