கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநில முன்னாள் முதல்வரும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்கள்,கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் செயல்படாமல் இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு,அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார், பின்னர் தனது சொந்த ஊருக்குத் தளம் மாறினார்.தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள தனது மகன் அருண்குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில்,அச்சுதானந்தன் அவர்களுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அச்சுதானந்தன் அவர்களுக்கு இரைப்பை குடல் அழற்சி மற்றும் சிறுநீரக கோளாறுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு அளித்த வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்கள்,ஐந்து வருடத்துக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர்,இவர் 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை கேரள மாநிலத்தின் இருபதாவது மற்றும் முன்னாள் முதல் அமைச்சர் ஆக பதவி வகித்தார்.’காமரேட் வி.எஸ்’ என்று அழைக்கப்படும் அவர், 1985 முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-இன் போலிட்ப்யூரோ உறுப்பினராக இருந்து வருகிறார் .1964ஆம் ஆண்டு,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவிய 32 உறுப்பினர்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…