அமித்ஷா கூறுவது தவறு.! புல்வாமா தாக்குதல் குறித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பிய காஷ்மீர் முன்னாள் ஆளுநர்.!

ஆளுநர் பதவியில் இருக்கும் போதே புல்வாமா தாக்குதல் பற்றி நான் கேள்வி எழுப்பிவிட்டேன் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் கூறினார்.
கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு வாகனங்களில் சென்று கொண்டிருந்த 40 மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அப்போது ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் மத்திய உள்துறை மீதும் , பிரதமர் மோடி மீதும் விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்த தாக்குதலில், உளவுத்துறை தோல்வியடைந்ததாகவும், பாதுகாப்பு வீரர்கள் செல்வதற்கு விமானம் தர உள்துறை மறுத்துவிட்டதாகவும் அதனால் தான் தரைவழி பயணத்தில் இந்த அசம்பாவிதம் நடைபெற்றதாகவும் சமீபத்தில் சத்யபால் மாலிக் குற்றம் சாட்டினார். மேலும், பிரதமர் மோடியிடம் இதனை பற்றி கூறும்போதும், இதனை பற்றி வெளியில் சொல்ல வேண்டாம் என அமைதியாக இருக்க கூறினார் எனவும் மாலிக் ஒரு தனியார் செய்தி நிறுவன பேட்டியில் குற்றம் சாட்டினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு.., 20 பேர் மாயம்.!
June 15, 2025
“அமெரிக்காவை தாக்கினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை.!
June 15, 2025