மேற்குவங்கம், கேரளா உட்பட 12 மாநில ஆளுநர்களின் பதவி காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிய இருக்கும் புதிதாக ஆளுநர் பதவிக்கு பாஜக காட்சியைச் சார்ந்த மூத்த தலைவர்கள் அதிகம் தேர்வு செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் தேர்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மூத்த தலைவர்களுள் ஒருவராக இருப்பவர் பொன்.ராதாகிருஷ்னன். 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் கன்னியாகுமரி போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தமிழகத்தில் ஒரே தொகுதியில் பாஜக வெற்றி பெற்றதால் மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார் . மேலும் தமிழகத்தில் பாஜக ஒரு இடங்களிலிலும் வெற்றி பெறவில்லை. எனவே, தமிழக பாஜக மூத்த தலைவராக இருக்கும் பொன்னார் அவர்களுக்கு ஆளுநர் பதவி தர இருப்பதாக கூறப்படுகிறது.
மேற்குவங்கம்,உத்திரபிரதேசம், திரிபுரா, நாகலாந்து, குஜராத் ஆகிய மாநில ஆளுநர் பதவி ஜூலை மாதத்துடனும், மகாராஷ்டிரா,கோவா, கர்நாடக மாநில ஆளுநர்களின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதத்துடனும், கேரளா மாநில ஆளுநர் பதவிக்காலம் செப்டம்பர் மாதத்திலும் முடிகிறது. அதே போல், சட்டீஸ்கர், மிசோரம், ஆந்திரா மாநிலங்களிலும் புதிய கவர்னர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…