ராஜஸ்தானில் மேலும் 4 பேர் பலி..123 பேருக்கு கொரோனா உறுதி.!

Published by
பாலா கலியமூர்த்தி

ராஜஸ்தானில் மேலும் 4 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், அம்மாநிலத்தில் இதுவரை 75 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவி இருப்பதால் பாதிப்பும், உயிரிழப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை நாள்தோறும் அந்தந்த மாநில சுகாதர அமைப்பு வெளியிட்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் 42,533 பேர் பாதிக்கப்பட்டு, 1,373 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட 42,533 பேரில் 11,707 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று மத்திய சுகாதார அமைப்பு தெரிவித்தது. 

நாட்டிலேயே அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 12,974 பேர் பாதிக்கப்பட்டு, 548 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் இதுவரை 2,115 பேர் குணமடைந்து உள்ளார்கள். இதையடுத்து குஜராத்தில் 5428, டெல்லியில் 4549, தமிழ்நாட்டில் 3023, ராஜஸ்தானில் 2886 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ராஜஸ்தானில் மேலும் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 3009 ஆக அதிகரித்துள்ளது. இதுமட்டுமில்லாமல் மேலும் 4 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்கள். ஏற்கனவே அங்கு 71 பலியாகியுள்ள நிலையில், தற்போது 75 ஆக உயர்ந்துள்ளது. அம்மாநிலத்தில் அதிகபட்சமாக ஜெய்ப்பூர் மாவட்டத்தில் 1005 பேர் கொரோனாவால் பாதித்து உள்ளனர். ராஜஸ்தானில் இதுவரை 1356 பேர் குணமடைந்துள்ளார்கள் என்றும் தற்போது கொரோனா வார்டில் 1578 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் எனவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

26 seconds ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

50 minutes ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

2 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

2 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

2 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

4 hours ago