ராஜஸ்தானில் மேலும் 4 பேர் பலி..123 பேருக்கு கொரோனா உறுதி.!

Published by
பாலா கலியமூர்த்தி

ராஜஸ்தானில் மேலும் 4 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், அம்மாநிலத்தில் இதுவரை 75 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவி இருப்பதால் பாதிப்பும், உயிரிழப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை நாள்தோறும் அந்தந்த மாநில சுகாதர அமைப்பு வெளியிட்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் 42,533 பேர் பாதிக்கப்பட்டு, 1,373 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட 42,533 பேரில் 11,707 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று மத்திய சுகாதார அமைப்பு தெரிவித்தது. 

நாட்டிலேயே அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 12,974 பேர் பாதிக்கப்பட்டு, 548 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் இதுவரை 2,115 பேர் குணமடைந்து உள்ளார்கள். இதையடுத்து குஜராத்தில் 5428, டெல்லியில் 4549, தமிழ்நாட்டில் 3023, ராஜஸ்தானில் 2886 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ராஜஸ்தானில் மேலும் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 3009 ஆக அதிகரித்துள்ளது. இதுமட்டுமில்லாமல் மேலும் 4 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்கள். ஏற்கனவே அங்கு 71 பலியாகியுள்ள நிலையில், தற்போது 75 ஆக உயர்ந்துள்ளது. அம்மாநிலத்தில் அதிகபட்சமாக ஜெய்ப்பூர் மாவட்டத்தில் 1005 பேர் கொரோனாவால் பாதித்து உள்ளனர். ராஜஸ்தானில் இதுவரை 1356 பேர் குணமடைந்துள்ளார்கள் என்றும் தற்போது கொரோனா வார்டில் 1578 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் எனவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதனால் இரு நாட்டு…

7 minutes ago

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

1 hour ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

2 hours ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

2 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

10 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

10 hours ago