இன்று முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த சில மாதங்களாக திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா குறைந்துள்ளதையடுத்து பக்தர்களுக்கு சில கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் அனுமதி கொடுக்கப்படுத்து வருகிறது.
மேலும் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக திருப்பதியில் தரிசனம் செய்ய வரக்கூடிய பக்தர்களுக்கு 300 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதிலும், முக்கிய நபர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டு வந்தது. தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் வீதம் கட்டண தரிசனதில் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
ஆனால் இன்று முதல் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. முதல்கட்டமாக உள்ளூரை சேர்ந்த 2000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படும் எனவும் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…