இன்று முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த சில மாதங்களாக திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா குறைந்துள்ளதையடுத்து பக்தர்களுக்கு சில கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் அனுமதி கொடுக்கப்படுத்து வருகிறது.
மேலும் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக திருப்பதியில் தரிசனம் செய்ய வரக்கூடிய பக்தர்களுக்கு 300 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதிலும், முக்கிய நபர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டு வந்தது. தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் வீதம் கட்டண தரிசனதில் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
ஆனால் இன்று முதல் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. முதல்கட்டமாக உள்ளூரை சேர்ந்த 2000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படும் எனவும் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…