இன்று முதல் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல் – கர்நாடக அரசு!

Published by
Rebekal
கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாடு முழுவதும் அதிகளவில் குறைந்து இருந்தாலும் பல மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் தற்போது சிறிது சிறிதாக பரவிக் கொண்டே தான் இருக்கிறது. எனவே மாநில அரசுகள் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவிலும் கொரோனாவால் விதிக்கப்பட்டிருந்த கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடு களிலிருந்து சில தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்து இருந்தது.
இந்நிலையில்,  வார நாட்களில் கொடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகளுக்கு வார இறுதி நாட்களில் தற்பொழுது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் கர்நாடக மாநிலம் முழுவதும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் திங்கள் கிழமை காலை 5 மணி வரை வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முழு ஊரடங்கு சமயத்தில் அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கடைகளும், காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும், குறைந்த அளவு பேருந்து சேவைகள் மற்றும் ரயில், விமான சேவைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
Published by
Rebekal

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

9 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

10 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

11 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

11 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

12 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

13 hours ago