கொரோனாவை கட்டுப்படுத்த பீகாரில் முழு ஊரடங்கு மே 25 வரை நீட்டிப்பு!

Published by
Rebekal

கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக பரவி வரும் நிலையில், மே 25ஆம் தேதி வரையில் பீகாரில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கவும் செய்கின்றனர். இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனாவை ஒழிக்க பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை எடுத்து வருகிறது. இதனையடுத்து,  பீகார் மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3500 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 74 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை கொரோனாவால் 6 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பீகாரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஏற்கனவே பீகாரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு வருகிற 15-ஆம் தேதி வரையில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் கொரோனாவின் தாக்கம் அதிகம் காணப்படுவதால் மே 25 ஆம் தேதி வரையிலும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

32 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

1 hour ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

2 hours ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

3 hours ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

4 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

4 hours ago