Categories: இந்தியா

G20 Summit : உச்சகட்ட பாதுகாப்பில் இரும்புக்கோட்டையாக மாறி வரும் தலைநகர் டெல்லி.! ஆட்டோ ரிக்ஷா முதல் ஆயுத கிடங்குகள் வரை…

Published by
மணிகண்டன்

உலகமே தற்போது உற்று நோக்கும் ஒரு மாநாடாக நாளை மற்றும் நாளை மறுநாள் தலைநகர் டெல்லியில்  நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாடு மாறி வருகிறது. இந்த ஆண்டு ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்தி வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் தலைநகர் டெல்லிக்கு வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர்.

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, தென் கொரியா, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா என 20 நாட்டுத் தலைவர்கள் ஒரே இடத்தில் கூட உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் டெல்லியில் பன்மடங்கு பலப்படுத்தப்பட்டு உள்ளன.

ஏற்கனவே, 3 நாட்களுக்கு பல்வேறு ரயில்கள் ரத்து, பல்வேறு ரயில்கள் புறப்படும் இடம், சேரும் இடத்தில் மாற்றம். விமான சேவையில் மாற்றம் என பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கல்வி நிறுவனங்கள், தனியார், அரசு அலுவலகங்கள் ஆகியவை 10ஆம் தேதி வரையில்  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் வாடகை ஆட்டோ ரிக்ஷா, கால் டாக்சி ஆகியவை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தலைவர்கள் தாங்கும் விடுதிக்கு மேல் டிரோன்கள் பறந்தால் அதனை தாக்கி அழிக்கும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜி20 மாநாடடில் பங்கேற்க வரும் உலக நாட்டு தலைவர்களுக்கு டெல்லியில் இந்திரா காந்தி விமான நிலையத்தில் அரசு முறை வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அங்கிருந்து சிறப்பு பாதை வழியாக அவர்கள் தாங்கும் இடத்திற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புடன் அவர்கள் ஜி20 மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்திற்கு அருகே தாங்கும் இடத்திற்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

ஜி20 மாநாட்டிற்கு வரும் தலைவர்கள் டெல்லியில்  பாரத் மண்டபத்திற்கு அருகே உள்ள நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்பட உள்ளனர். இதற்காக இந்த விடுதிகள் பலத்த பாதுகாப்பு வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல் குருகிராம் பகுதிகளிலும் உள்ள நட்சத்திர ஹோட்டல்களிலும் சில நாட்டு தலைவர்கள் தங்க வைக்கப்படஉள்ளனர்.

ஜி20 மாநாட்டிற்காக சுமார் 50 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மற்ற பாதுகாப்பு படையினரும் ஆயுதங்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய 19 இடங்களில் தொலைநோக்கி மூலம் கண்காணித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் ஏதேனும் பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்தால் கூட அதனை சமாளிக்க தலைவர்கள் தங்கும் இடத்தின் அருகே ஆயுதகிடங்குகள் ஒன்று தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆயுதங்களுடன் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.  பாதுகாப்பு உபகரணங்கள் மட்டுமின்றி மருத்துவ உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன.  அதேபோல் பாரத் மண்டபத்திற்குள் அனுமதி பெற்று செல்லும் நபர்கள் கேமரா, குடை போன்ற இருபது வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

Published by
மணிகண்டன்

Recent Posts

இவங்க தான் இந்தியாவோட பெஸ்ட் வீரர்கள்! ரவி சாஸ்திரி தேர்வு செய்த 5 பேர்?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, 2025 ஜூலை 21 அன்று “The…

43 minutes ago

கூட்டணிக்கு கடை விரிக்கும் எடப்பாடி – அமைச்சர் துரைமுருகன் கிண்டல்!

சென்னை : தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஜூலை 22 (இன்று) சென்னையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில், அதிமுக…

2 hours ago

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருவிழா : விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

விருதுநகர் : மாவட்டத்தில், 2025 வரும் ஜூலை 28-ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்…

3 hours ago

அஜித் வழக்கு : ‘ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கணும்’ தமிழக அரசுக்கு முக்கிய உத்தரவு போட்ட ஐகோர்ட்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (29), 2025 ஜூன் 27…

3 hours ago

வங்கதேச விமான விபத்து : தொடரும் சோகம்…பலி எண்ணிக்கை 27-ஆக உயர்வு!

டாக்கா : சமீபகாலமாக விமான விபத்து நடப்பது என்பது அதிகமாகி வருகிறது. ஏற்கனவே, கடந்த மாதம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு…

3 hours ago

மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை :  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை…

4 hours ago