Categories: இந்தியா

India – Canada : இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்… கனடா அதிகாரிக்கு இந்திய தூதரகம் அதிரடி உத்தரவு.!

Published by
மணிகண்டன்

கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, இந்த கொலையின் பின்னணியில் இந்தியாவுக்கு ஆதரவான ஓர் அமைப்பு இருப்பதாக  கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் குற்றம் சாட்டி இருந்தார்.

மேலும், இது தொடர்பாக கனடா நாட்டில் உள்ள இந்தியா தூதரக அதிகாரியை கனடா நாட்டு அரசாங்கம் அழைத்து அண்மையில்  மூத்த அதிகாரியை அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டு இருந்தது. இந்த விவகாரம் இந்தியா   – கனடா நாட்டு உறவுகளுக்கு இடையே பெரும் பரபரப்பை உண்டாக்கின.

இந்நிலையில், இன்று இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதரக அதிகாரிகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அழைத்து பேசியுல்ளது. அப்போது கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை வெளியேற கூறிய கனடா நாட்டு அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்னும் 5 நாட்களுக்குள் இந்தியாவில் உள்ள கனடா நாட்டு அதிகாரிகள் வெளியேற வேண்டும் என மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

இந்த காலிஸ்தான் பிரிவினைவாதிகள் விவகாரத்தில் இந்தியா – கனடா இடையே மறைமுக மோதல் போக்கு இருந்து கொண்டே இருக்கிறது. காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கனடாவில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்களை தாக்குவதும், இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதும் தொடர்கதையாக வருகிறது என்றும்,

காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கனடா நாட்டு அரசுக்கு ஆதரவாக இருப்பதால், அவர்களுக்கு கனடா நாட்டு அரசு புகலிடம் கொடுப்பதாக இந்திய தூதரக அதிகாரிகள் தொடர் குற்றசாட்டை முன்வைத்து வருகின்றனர். இந்த விவகாரம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஜி20 மாநாடு வரை எதிரொலித்தது.

ஜி20 மாநாட்டிற்காக இந்தியா வந்த கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரதமர் மோடியுனான சந்திப்பின் போது கூட பிரதமர் மோடி கனடா பிரதமரிடம் , தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்த வேண்டும். அதனை இரு நாடுகளும் ஒத்துழைப்பு வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இந்த விவகாரத்தில் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ – பிரதமர் மோடி இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், ஜி20 மாநாடு முடிந்து கனடா செல்ல இருந்த அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானம் பழுதாகியது. இதனை அடுத்து, மாற்று விமானம் வரும் வரையில் டெல்லியில் அவர் தங்க வைக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு கனடா நாட்டு விமானத்தில் ஊருக்கு புறப்பட்டார் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ என்பது குறிப்பிடதக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

வயசானாலும் உங்க விளையாட்டு மாறல…பேட்டிங் பீல்டிங்கில் கலக்கிய டிவில்லியர்ஸ்!

நார்தாம்ப்டன் : ஜூலை 22 அன்று, இங்கிலாந்தின் நார்தாம்ப்டனில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) டி20 தொடரில்,…

9 hours ago

அகமதாபாத் விமான விபத்து: பலியான பிரிட்டன் பயணிகள் உடல்கள் மாறி வந்துள்ளதாக உறவினர்கள் குற்றச்சாட்டு!

அகமதாபாத் : ஜூலை 23 அன்று, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா…

9 hours ago

கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் போக்குவரத்து அபராத தொகை எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த ஐந்து ஆண்டுகளாக போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் சுமார் 450 கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் நிலுவையில்…

10 hours ago

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சீனர்களுக்கு சுற்றுலா விசா!

டெல்லி :  ஜூலை 23 அன்று, சீனாவில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிக்கை வெளியிட்டு, சீன குடிமக்கள் இந்தியாவுக்கான…

10 hours ago

இளையராஜா VS என் பெயர் பாக்கும்போது பெருமையா இருக்கு…நடிகை வனிதா வேதனை!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி சிவராத்திரி’…

12 hours ago

INDvsENG : கருண் நாயரை தூக்கிய நிர்வாகம்! காரணம் என்ன?

மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறு விறுப்பாக…

13 hours ago