காதலை எதிர்த்த காரணத்தால் காதலியின் பாட்டி மற்றும் சகோதரனை குத்தி கொலை செய்து விட்டு காதலனும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மகாராஷ்டிராவின் மோமின்புராவில் வசிக்கும் 22வயதான மொயின் கான் கடந்தாண்டு நவம்பரில் குஞ்சன் என்ற பெண்ணை இன்ஸ்டாகிராம் வழியாக சந்தித்துள்ளார் . அதனையடுத்து கானை குஞ்சன் தனது குடும்பத்தினருக்கு நண்பர் என்று கூறி அறிமுகப்படுத்தியுள்ளார் . அதனையடுத்து சில நாட்களில் இருவரும் காதல் செய்வதை தெரிந்து கொண்டு குஞ்சன் குடும்பத்தினர் மொபைலை பறித்து விட்டு குஞ்சனை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர் .
இதனை அறிந்த மொயின் கான் வியாழக்கிழமை அன்று பிற்பகல் ஹஜரிபாஹாட்டில் உள்ள காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார் .அங்கு காதலியின் பாட்டி பிரமிளா மரோதி துர்வே(70) மற்றும் தம்பி யஷ் (10) ஆகியோரை கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார் .அதன் பின்னர் அங்கிருந்து தப்பி சென்று மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.குத்து கொண்ட பாட்டி மற்றும் சகோதரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்ததாகவும் ,ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கானின் உடல் மங்காப்பூர் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து இந்திய தண்டனைச் சட்டம் 302(கொலை)-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…