ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.ஜெகன் மோகனின் செயல்பாடுகள் அம்மாநில மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் நாடு முமுவதும் அவருக்கு ஆதரவுகளை குவிந்து வருகின்றது.
அங்கு எதிர்கட்சியாக தெலுங்கு தேசம் உள்ளது கடந்த புதன் கிழமை அன்று அக்கட்சியின் எம்பியான ஜேசி திவாகர் ரெட்டி ஆளும்கட்சியின் இசைக்கு ஏற்றாற்போல ஆந்திர காவல்துறை நடனம் ஆடுகிறது.நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர்களை தங்களது காலணிகளை முத்தமிட செய்வோம் என்று ஆவேச வெளிப்பட தெரிவித்தார்.இது அம்மாநிலத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த சலசலப்பு ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் தான் ஒய் எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்பியும்,முன்னாள் காவல்துறை அதிகாரியுமான கோரண்ட்லா மாதவ் காவல்துறையை சேர்ந்த காவலர் ஒருவரின் ஷீவை கையால் எடுத்து அதனை சுத்தம் செய்து துடைத்து அதற்கு முத்தமிட்டார்.
இந்த தகவல் அம்மாநிலத்தில் காட்டுத்தீயாக பரவியது.இது குறித்து கோரண்ட்லா மாதவ் தெரிவிக்கையில் காவல்துறையினரின் காலணிகள் இந்த நாட்டை காக்கும் பாதுகாக்கும் படை வீரர்களின் ஆயுதங்களாகவே பார்க்கிறேன்.
முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அனுமதி அளித்தால் நான் மீண்டும் காவல்துறையில் இணைந்து நாட்டு மக்களுக்காக பாடுபடுவன் என்று பெருமிதம் பொங்க தெரிவித்தார்.தெலுங்கு தேச எம்பியின் பேச்சுக்கு தனது செயல் மூலம் சம்பட்டி அடி கொடுத்துள்ளார் ஒய் எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்பி.
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…