சுகாதார பணியாளர்களுக்கான காப்பீடு திட்டம், 23-ம் தேதியுடன் முடிவடைந்ததால், 24-ம் தேதிக்குப் பின் காப்பீடு திட்டம் புதுப்பிக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கொரோனாக்கு எதிரான போரில் சுகாதார பணியாளர்கள் நம்மை காக்கின்றனர். இதனால் அவர்களை கொரோனா வாரியர்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். கொரோனாவுடன் தினமும் போராடும் இவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் பலர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பும் நிலையில், சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்துள்ளனர்.
அந்தவகையில், கொரோனாவுக்கு எதிராக போராடும் பணியாளர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுகாதார பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை அறிவித்தது. பிரதான் மந்திரி கரிப் கல்யான் தொகுப்பு எனப்படும் இந்த திட்டத்தின் மூலம் ரூ.50 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
இந்த திட்டம், கடந்தாண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், 3 முறை நீட்டிக்கப்பட்டது. இந்த காப்பீடு திட்டத்தின் மூன்றாம் முறை கால அளவு வருகிற 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், 24-ம் தேதிக்குப் பின் புதிய காப்பீடு திட்டம் சுகாதார பணியாளர்களுக்கு புதுப்பிக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக நியூ இந்தியா அசுரன்ஸ் நிறுவனத்துடன் பேசி வருவதாகவும், இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 287 பேருக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…