கொரோனா வாரியர்ஸ்க்கு 50 லட்சத்திற்கான காப்பீடு திட்டம்.. அரசு முக்கிய தகவல்!

Published by
Surya

சுகாதார பணியாளர்களுக்கான காப்பீடு திட்டம், 23-ம் தேதியுடன் முடிவடைந்ததால், 24-ம் தேதிக்குப் பின் காப்பீடு திட்டம் புதுப்பிக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கொரோனாக்கு எதிரான போரில் சுகாதார பணியாளர்கள் நம்மை காக்கின்றனர். இதனால் அவர்களை கொரோனா வாரியர்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். கொரோனாவுடன் தினமும் போராடும் இவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் பலர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பும் நிலையில், சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்துள்ளனர்.

அந்தவகையில், கொரோனாவுக்கு எதிராக போராடும் பணியாளர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுகாதார பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை அறிவித்தது. பிரதான் மந்திரி கரிப் கல்யான் தொகுப்பு எனப்படும் இந்த திட்டத்தின் மூலம் ரூ.50 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

இந்த திட்டம், கடந்தாண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், 3 முறை நீட்டிக்கப்பட்டது. இந்த காப்பீடு திட்டத்தின் மூன்றாம் முறை கால அளவு வருகிற 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், 24-ம் தேதிக்குப் பின் புதிய காப்பீடு திட்டம் சுகாதார பணியாளர்களுக்கு புதுப்பிக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக நியூ இந்தியா அசுரன்ஸ் நிறுவனத்துடன் பேசி வருவதாகவும், இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 287 பேருக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Published by
Surya

Recent Posts

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

21 minutes ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

1 hour ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

2 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

18 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

18 hours ago