வேளாண் சட்டம் போன்ற சீர்திருத்தத்திற்கான பாதை தொடக்கத்தில் தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடும் என ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், விவசாயிகளுக்கு ஒவ்வொரு இந்தியரும் வணக்கம் செலுத்த வேண்டும். பரந்த மக்கள்தொகை கொண்ட நாட்டை உணவு தானியங்கள், பால் உற்பத்தியில் தன்னிறைவு பெறச்செய்துள்ளனர்.
இயற்கை இடர்பாடுகள், கொரோனா தொற்று என பல சவால்களை எதிர்கொண்டு உற்பத்தியை தக்கவைத்தனர். வேளாண் சட்டம் போன்ற சீர்திருத்தத்திற்கான பாதை தொடக்கத்தில் தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடும். விவசாயிகளின் நலன் காப்பதில் அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது.
20 வீரர்கள் தங்கள் உயிரை தந்து எல்லையில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை தோல்வியடைய செய்தனர். துணிச்சலான வீரர்களுக்கு நாடு நன்றியுடன் இருக்கும். எந்த விலை தந்தாவது நமது தேசிய நலன் பாதுகாக்கப்படும். சுயசார்பு இந்தியா திட்டத்தில் நாடு வளர்ச்சி பாதையில் விரைவாக முன்னேறும். உலகத்திற்கே கொரோனா தடுப்பூசியை இந்தியா தயாரித்து அளிக்கும் என தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…