ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்ற வாக்குறுதி போன்ற மோசடியானது என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம், 2 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் இது குறித்து முன்னால் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,பிரதமரும் அமைச்சர்களும், குறைந்தபட்ச ஆதார விலை உறுதியாக வழங்கப்படும் என்று கூறிவருகின்றனர்.இதனை எப்படி என்று இந்திய மக்களுக்கு விளக்க வேண்டும்.குறிப்பாக ஒரு விவசாயி என்ன விவசாயம் செய்துள்ளார் , அதனை யாருக்கு விற்றுள்ளார் என அரசுக்கு எப்படி தெரியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.இந்தியா முழுவதும் உள்ள இருக்கின்ற கிராமங்களில் தினத்தோறும், மில்லயன் கணக்கான விவசாய பொருட்கள் விற்பனை தொடர்பாக பரிமாற்றம் நடைபெற்று வருகிறது. இந்த பரிமாற்றங்களுக்கு எப்படி மத்திய, மாநில அரசுகள் குறைந்த பட்ச ஆதார விலையை உறுதி செய்யும்.மோடி அரசு விவசாயிகளிடம் பொய் சொல்வதையும், தவறான வாக்குறுதிகளை வழங்குவதையும் நிறுத்த வேண்டும்.
தனிநபர் விளைபொருள் பரிமாற்றத்துக்கும், குறைந்த பட்ச ஆதார விலை அளிக்கப்படும் என்ற பிரதமரின் வாக்குறுதி, ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்ற வாக்குறுதி போன்ற மோசடியானது என்று தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…
கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…