நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக பரவி வரும் நிலையில், இந்த கொரோனா வைரஸ் முதல் அலையில், முதியவர்களை தான் அதிகமாக பாதித்தது. பின் இரண்டாவது அலையில் நடுத்தர வயதினரே பெரிதும் பாதித்தது. தற்போது மூன்றாவது அலையில் குழந்தைகளை பாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், ஆயுஷ் அமைச்சகம் வெள்ளிக்கிழமை அன்று குழந்தைகளை கொரோனா பாதிப்பில் இருந்து எப்படி பாதுகாப்பது என்பது பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தொற்று நோய் பொதுவாக பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு லேசான பாதிப்பை தான் ஏற்படுத்து. பெரும்பாலான குழந்தைகளுக்கு எந்த ஒரு குறிப்பிட்ட சிகிச்சையும் தேவையில்லை. இந்த கொடிய வைரஸில் இருந்து குழந்தைகளை காப்பாற்றுவதற்கான சிறந்த அணுகுமுறை தற்காப்பு நடவடிக்கைகள் தான் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக 58 பக்க ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிதல், யோகா பயிற்சி, ஆயுர்வேத மருந்துகள் ஊட்டச்சத்து மருந்து மூலம் கொரோனாவில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கலாம். பெற்றோர் தடுப்பூசி போடுவது ஆகியவை அந்த அறிக்கையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியானது மிகவும் வலுவானது. ஆனால் கொரோனா வைரஸ் பல பிரிவுகளாக உருவாகி வருவதால், அதன் பாதிப்பிலிருந்து தப்பிக்க தொடர்பான அனைத்து நெறி முறைகளையும் பின்பற்ற வேண்டியது அவசியம் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறை இதோ,
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…